வால்பாறை உள்ள புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக வந்த விநாயகர் சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. வரும் வழியில் திரளான பக்தர்கள வழிபாடு நடத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 32 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை ஏ எஸ் டி சேகர் ஜி தலைமையில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை டவுன் பகுதியில் ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன.
வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட் பகுதியில் உள்ளது. இந்த 62 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு எஸ்டேட்டிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு ஐந்து தினங்களாக போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு அனைத்து சிலைகளுக்கும் பூஜை செய்யப்பட்டு மாநில செயலாளர் சி எம் அண்ணாதுரை மற்றும் கோனார் நகைக்கடை வல்லிகண்ணு முன்னிலையிலும் நடத்தப்பட்டன. மாவட்ட துணை தலைவர் எஸ் டி சேகர் தலைவர் தலைமையில் 108 சிலைகள் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைக்கப்பட்டது.
வால்பாறை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் சிலைகளை கரைக்கப்பட்டன.
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.