தீ விபத்திற்கு இழப்பீடு கோரி கருப்புக் கொடி - தாராபுரம் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

குப்பைகளை எரிக்க வைக்கபடும் தீயால் வைக்கோல் தீப்பற்றி எரிந்து சேதமான விவசாயிக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி தாராபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி வந்து கோரிக்கை வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பொது மக்கள் கருப்பு கொடி ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் சம்பத் நகர் பூங்காவில் தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. பி.டி.ஒ சிவகுருநாதன் கிராமஊராட்சி, எ.பி.டி.ஒ இசக்கிமுத்து, துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் பொதுமக்கள் சார்பாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகேட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. மேலும் வரவு, செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் பஞ்சாயத்து பகுதி முழுவதும் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டது.

அலங்கியம் ரோடு ராம் நகர் பகுதியில் தூய்மைபணியாளர்கள் குப்பைகளுக்கு தீ வைத்ததால் ஒரு விவசாயின் வைக்கோல் எரிந்து சேதமானது. அதற்கு நஷ்ட ஈடு கேட்டு கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கருப்பு கொடியுடன் வந்து தலைவர் செல்வியிடம் சரமாரி கேள்வி கேட்டனர்.



மேலும் தீ விபத்து சம்பந்தமாக தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பதில் கூற முடியாமல் ஊராட்சி மன்ற தலைவி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் டெங்கு பராவல் தடுப்பு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்பட-21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...