குண்டடத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது

குண்டடத்தில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.


திருப்பூர்: கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.

குண்டடத்தில் திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. குண்டடம் கோல்டு ஸ்டார் கிரிக்–கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தாராபுரம், பல்லடம், திருப்பூர், உடுமலை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் அ.தி.மு.க. மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்து வெங்கடேஸ்வரனும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமாரும், 3-ம் பரிசாக ரூ.7 ஆயிரம் பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜூம், 4-ம் பரிசாக ரூ.5ஆயிரம் குண்டடம் தொழிலதிபர் சத்தியசீலன் மற்றும் கோப்பைகளை குண்டடம் மணி, வெங்கி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.



அதற்கான பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையை பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமார் வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...