தாராபுரம் அருகே செயல்படாத இ சேவை மையம் - செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் உள்ள இ சேவை மையம் செயல்படாத காரணத்தினால் பல்வேறு திட்டங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே செயல்படாமல் உள்ள இ சேவை மையத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையம் முறையாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் இணைப்பதிவாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தாராபுரம் வட்டார தலைவர் காளிதாஸ் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் இ சேவை மையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த மையத்தில் இரண்டு பணியாளர்கள் இருந்தும் முறையாக செயல்படுத்துவதில்லை.

இதனால் வருவாய் சான்றிதழ்கள் உள்ளிட்ட இதர சேவைகளுக்கு தனியார் சேவை மையத்தை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .எனவே கொளத்துப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையத்தை முறையாக செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...