‌குடிநீர் பற்றாக்குறை - திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை

உடுமலை அருகே நிலவும் கடும் வறட்சியை தடுக்க திருமூர்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிடுமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: குடிநீர் பற்றாக்குறை தடுக்க திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் உடுமலை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்

உடுமலை அடுத்த ஆலம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் பூசாரிநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து மானுப்பட்டி கால்வாய் மூலமாக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் 10 க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் இருப்பு உயர்வதுடன் 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தளி வாய்க்கால் மூலம் பாசனம் பெருகின்ற ஏழு குளங்களுடன் இந்த ஏரியையும் சேர்த்து தண்ணீர் வழங்கலாம் என்று கடந்த 2008 -ம் ஆண்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதைத் தொடர்ந்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கம் போல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் பூசாரிநாயக்கன் ஏரிக்கு நீர் இருப்பு ஏற்றவாறு 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரையிலும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் நிலத்தடி நீர்இருப்பு பாதிப்பு அடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன் சாகுபடி பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து குறிச்சிக்கோட்டை கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக முறையான அரசாணை பெற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பூசாரிநாயக்கன் ஏரியை ஆதாரமாகக் கொண்ட பகுதியில் கடும் வறட்சி நிலவுவதுடன் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஏரிக்கு அரசு உத்தரவுப்படி தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...