ரயிலில் பெட்ரோலுடன் இருசக்கர வாகனத்தை அனுப்பிய வாலிபரை கோவையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கன்னியாகுமரி செல்வதற்கான ரயிலில் பெட்ரோலுடன் பார்சல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்
புனே-கன்னியாகுமரி ரயில் கர்நாடக மாநிலம் கலபுரகி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவைக்கு வந்தது.
அந்த ரயிலில் பார்சல் சேவை மூலம் கொண்டு வரப்பட்ட பைக்கை, பார்சல் அலுவலர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.அப்போது அந்த பைக்கில், பெட்ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கோவை ரயில்வே பாதுகாப்பு படையில் புகார் அளித்தார்.
ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.அதில் பெட்ரோலுடன் பைக்கை அனுப்பி வைத்தது, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சித்தேஸ்வரன், 25, என்பது தெரிந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சித்தேஸ்வரன் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்தனர்.
புனே-கன்னியாகுமரி ரயில் கர்நாடக மாநிலம் கலபுரகி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவைக்கு வந்தது.
அந்த ரயிலில் பார்சல் சேவை மூலம் கொண்டு வரப்பட்ட பைக்கை, பார்சல் அலுவலர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.அப்போது அந்த பைக்கில், பெட்ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கோவை ரயில்வே பாதுகாப்பு படையில் புகார் அளித்தார்.
ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.அதில் பெட்ரோலுடன் பைக்கை அனுப்பி வைத்தது, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சித்தேஸ்வரன், 25, என்பது தெரிந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சித்தேஸ்வரன் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்தனர்.