திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அக்டோபர் 5 முதல் 12 -ம் தேதி வரையில் தகவல் அறியும் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை யொட்டி தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வார விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயா தொடங்கி வைத்தார். தமிழ் ஆசிரியர்கள் வே. சின்னராசு, ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
அக்டோபர் 5 முதல் 12 -ம் தேதி வரையில் தகவல் அறியும் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை யொட்டி தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வார விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயா தொடங்கி வைத்தார். தமிழ் ஆசிரியர்கள் வே. சின்னராசு, ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.