தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரம் - உடுமலை மாநில நெடுஞ்சாலை மிக குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தவிர்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்-உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரத்தில் இருந்து உடுமலைக்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது. கொண்டரசம்பாளையம், தளவாய்பட்டிணம், செலாம் பாளையம், ஊத்துப் பாளையம், சின்னக்காம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இந்த சாலை வழியாக செல்ல வேண்டும்.

முக்கியதுவம் வாய்ந்த மாநில நெடுஞ்சாலை தாராபுரத்தில் இருந்து தளவாய்பட்டிணம் வரை சுமார் 10 கி.மீ. மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என ஏராளமாக உள்ளது.

இந்நிலையில் தினசரி இதன் வழியாக நூற்றுக்கணக்கான நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. உடுமலை சாலையில் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேலாக உள்ள சாலையில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத அளவுக்கு பாதை குறுகியே உள்ளது. அத்துடன் எதிரே வாகனங்கள் வழியில்லாமல் சில சமயம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலையை விரிவுபடுத்த கோரி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தினசரி வாகன விபத்துகளில் சிக்கி உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாராபுரம்- உடுமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...