மடத்துக்குளம் அருகே தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மடத்துக்குளம் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: ஆராயிரம் எண்ணிக்கையிலான கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை விற்பனை செய்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரத் தொழுவில் சட்டவிரோதமாக கேரள மாநில லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சென்ற போலீசார், பெட்ரோல் பங்க் அருகே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போது, காரத்தொழுவைச் சேர்ந்த சின்னராசு மகன் பொன்னுச்சாமி(55) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, அவர் வைத்திருந்த சுமார் 6000 எண்ணிக்கையிலான கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்த போலீசார், பொன்னுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...