திருப்பூர் அருகே மலைகளில் இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக செல்வதை விவசாய நிலங்கள் அருகிலுள்ள நீர் நிலைகளில் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: பாசனத்திற்கு தண்ணீர் திறக்ககோரி விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்துக்கு ஆதரவு சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகர், வலையபாளையம்,ராவணாபுரம், தேனூர்புதூர் மற்றும் அர்த்தநாரி பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஒன்றினைந்து பாலாற்றுக்கு தெற்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வடக்கே உள்ள விவசாய நிலங்கள் கடுமையாக வறட்சி காரணமாக தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தண்ணீர் இல்லாமல் பாலைவனமாக மாறும் நிலையில் உள்ளது எனவே தண்ணீர் பாசனம் வேண்டிய ஆலோசனை கூட்டம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக நடத்தப்பட்டது.
1. அரசக்கு பாசனம் வேண்டி கோரிக்கை
2. விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்துக்கு ஆதரவு சேர்க்க வேண்டும்.
3. மலைகளில் இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக செல்கிறது அதை விவசாய நிலங்கள்அருகிலுள்ள நீர் நிலைகளில் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.
4. பாலாற்றில் திருமூர்த்தி அணை கட்டிய பின்னர் இயற்கையான முறையில் கிடைக்கும் நீர் தடை பெற்றதைத் மீண்டும் பெற வழி வகை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகர், வலையபாளையம்,ராவணாபுரம், தேனூர்புதூர் மற்றும் அர்த்தநாரி பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஒன்றினைந்து பாலாற்றுக்கு தெற்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வடக்கே உள்ள விவசாய நிலங்கள் கடுமையாக வறட்சி காரணமாக தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தண்ணீர் இல்லாமல் பாலைவனமாக மாறும் நிலையில் உள்ளது எனவே தண்ணீர் பாசனம் வேண்டிய ஆலோசனை கூட்டம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக நடத்தப்பட்டது.
1. அரசக்கு பாசனம் வேண்டி கோரிக்கை
2. விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்துக்கு ஆதரவு சேர்க்க வேண்டும்.
3. மலைகளில் இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக செல்கிறது அதை விவசாய நிலங்கள்அருகிலுள்ள நீர் நிலைகளில் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.
4. பாலாற்றில் திருமூர்த்தி அணை கட்டிய பின்னர் இயற்கையான முறையில் கிடைக்கும் நீர் தடை பெற்றதைத் மீண்டும் பெற வழி வகை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.