குண்டடம் அருகே மனைவியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியில் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: கணவன் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிக்க சென்றபோது காரின் கண்ணாடிகளை உடைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). இவரது மனைவி சந்தியா. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியாவை அவருடைய கணவர் சுரேஷ்குமார் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்க காரில் குண்டடம் சென்று ஒரு பேக்கரி முன்பு காரை நிறுத்தி விட்டு போலீஸ் நிலையத்திற்கு சந்தியா சென்றார்.

அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் காரின் கண்ணாடிகளை உடைத்துவிட்டார். இதையடுத்து சந்தியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...