உடுமலை அருகே திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலை அருகே குடிமங்கலத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.


திருப்பூர்: திமுக சார்பில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு இன்று குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி தலைமையில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் பி.சாமிநாதன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.



மேலும் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

இங்கு குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 100 கர்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதே போல தேர்தல் வாக்குறுதியில் அளித்த முக்கியமான வாக்குறுதி மகளிர் உரிமைத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் காலை உணவு திட்டம் உட்பட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் முனைப்பு காட்டி வருகிறார் என பேசினார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன், ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...