புரட்டாசி கடைசி நாள் - மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


திருப்பூர்: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. குழந்தை இல்லாதவர்கள், தொழில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் 60 நாட்களுக்குள் வேண்டும் வரங்களை நிறைவேற்றி தரும் ஸ்தலமாக இத்திருக்கோவில் விளங்குகிறது.



ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று கதிராய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இரவு கோவில் கருவறை மாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை மற்றும் கன்னிமார் சிலைகளை கீழே இறக்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக காலை முதல் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திருப்பூர், கோவை,மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை மீண்டும் பெருமாள் மற்றும் கன்னிமார் சிலைகளுக்கு கபால பூஜை செய்யப்பட்டு திரு வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.

இந்நிகழ்வினை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செல்வராஜ்,நடராஜன், முருகேசன்,பழனிச்சாமி,வேலுச்சாமி,சிடிசி பழனிச்சாமி, சரவணன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...