புரட்டாசி கடைசி நாள் - மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


திருப்பூர்: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. குழந்தை இல்லாதவர்கள், தொழில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் 60 நாட்களுக்குள் வேண்டும் வரங்களை நிறைவேற்றி தரும் ஸ்தலமாக இத்திருக்கோவில் விளங்குகிறது.



ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று கதிராய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இரவு கோவில் கருவறை மாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை மற்றும் கன்னிமார் சிலைகளை கீழே இறக்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக காலை முதல் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திருப்பூர், கோவை,மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை மீண்டும் பெருமாள் மற்றும் கன்னிமார் சிலைகளுக்கு கபால பூஜை செய்யப்பட்டு திரு வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.

இந்நிகழ்வினை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செல்வராஜ்,நடராஜன், முருகேசன்,பழனிச்சாமி,வேலுச்சாமி,சிடிசி பழனிச்சாமி, சரவணன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...