உடுமலை அமராவதி நகரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு

அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் பகுதியில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அருள்மிகு எழுமலையாண் கோவில் புரட்டாசி மாதம் 4 வது சனிக்கிழமை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட காவல் துறை, ராயல் அரிமா சங்கம், உடுமலை ஶ்ரீ சக்ரா மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் , இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி.வ ஜெயராமன், ராயல் அரிமா சங்க நிர்வாகிகள், ஶ்ரீ சக்ரா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...