பல்லடம் கிளைச்சிறை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்ற போது பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளைச்சிறை முன்பு மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்றபோது, பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு நபர் ஒருவர் காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது. அவற்றை ரெக்கவரி வேன் மூலம் குழியில் இருந்து மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நீதிமன்றம், கிளைச் சிறை, பழைய காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் என அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள மங்கலம் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் பல்லடம் கிளைச்சிறை முன்பு பாதாள சாக்கடை பழுதாகி ஒரு வருடம் ஆகியும் மூடப்படாமல் உள்ளது.

கிளைச்சிறை, நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருவோர் பல்லடம் கிளைச் சிறை முன்பு தங்களது வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் கிளைச்சிறை முன்பு மூடப்படாத பாதாள சாக்கடையால் கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு வாகனங்கள் பாதாள சாக்கடை குழியில் இறங்கி விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.



இன்று மங்கலம் சாலையில் படியூர் நோக்கி தனது காரில் வந்த சத்தியமூர்த்தி என்பவர் தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு தனது காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது.



ரெக்கவரி வேன் மூலம் காரை குழியில் இருந்து மீட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மங்கலம் சாலையில் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க மூடப்படாமல் உள்ள பாதாள சாக்கடையை உடனடியாக மூட பல்லடம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...