பல்லடம் கிளைச்சிறை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்ற போது பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளைச்சிறை முன்பு மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்றபோது, பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு நபர் ஒருவர் காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது. அவற்றை ரெக்கவரி வேன் மூலம் குழியில் இருந்து மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நீதிமன்றம், கிளைச் சிறை, பழைய காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் என அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள மங்கலம் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் பல்லடம் கிளைச்சிறை முன்பு பாதாள சாக்கடை பழுதாகி ஒரு வருடம் ஆகியும் மூடப்படாமல் உள்ளது.

கிளைச்சிறை, நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருவோர் பல்லடம் கிளைச் சிறை முன்பு தங்களது வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் கிளைச்சிறை முன்பு மூடப்படாத பாதாள சாக்கடையால் கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு வாகனங்கள் பாதாள சாக்கடை குழியில் இறங்கி விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.



இன்று மங்கலம் சாலையில் படியூர் நோக்கி தனது காரில் வந்த சத்தியமூர்த்தி என்பவர் தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு தனது காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது.



ரெக்கவரி வேன் மூலம் காரை குழியில் இருந்து மீட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மங்கலம் சாலையில் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க மூடப்படாமல் உள்ள பாதாள சாக்கடையை உடனடியாக மூட பல்லடம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...