பல்லடம் கிளைச்சிறை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்ற போது பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளைச்சிறை முன்பு மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்றபோது, பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு நபர் ஒருவர் காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது. அவற்றை ரெக்கவரி வேன் மூலம் குழியில் இருந்து மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நீதிமன்றம், கிளைச் சிறை, பழைய காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் என அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள மங்கலம் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் பல்லடம் கிளைச்சிறை முன்பு பாதாள சாக்கடை பழுதாகி ஒரு வருடம் ஆகியும் மூடப்படாமல் உள்ளது.

கிளைச்சிறை, நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருவோர் பல்லடம் கிளைச் சிறை முன்பு தங்களது வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் கிளைச்சிறை முன்பு மூடப்படாத பாதாள சாக்கடையால் கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு வாகனங்கள் பாதாள சாக்கடை குழியில் இறங்கி விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.



இன்று மங்கலம் சாலையில் படியூர் நோக்கி தனது காரில் வந்த சத்தியமூர்த்தி என்பவர் தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு தனது காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது.



ரெக்கவரி வேன் மூலம் காரை குழியில் இருந்து மீட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மங்கலம் சாலையில் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க மூடப்படாமல் உள்ள பாதாள சாக்கடையை உடனடியாக மூட பல்லடம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...