கலாம் பிறந்த நாள் - பல்லடம் அருகே சிலம்பம் சுற்றி நெழிகி ஒழிப்பு பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு

ஏவுகனை நாயகன் ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்லடம் அருகே கேத்தனூரில் 92 நிமிடங்கள் இடைநில்லாமல் சிலம்பம் சுற்றி நெகிழி ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: சிலம்பம் சுற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மரம் வளர்ப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும், மாணவர்களும், பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



பாரத தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 92 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் நம் கை சிலம்பம் அமைப்பினர் இணைந்து மரம் வளர்ப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 மாணவர்கள் பங்கேற்ற 92 நிமிடங்கள் இடைநில்லாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி கேத்தனூர் அரசு பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் சித்ரா ஹரி கோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.



நம் கை சிலம்பம் அமைப்பின் பயிற்சியாளர் சுதாகர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மரம் வளர்ப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும், மாணவர்கள், பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



மேலும் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...