ஏவுகனை நாயகன் ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்லடம் அருகே கேத்தனூரில் 92 நிமிடங்கள் இடைநில்லாமல் சிலம்பம் சுற்றி நெகிழி ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: சிலம்பம் சுற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மரம் வளர்ப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும், மாணவர்களும், பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாரத தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 92 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் நம் கை சிலம்பம் அமைப்பினர் இணைந்து மரம் வளர்ப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 மாணவர்கள் பங்கேற்ற 92 நிமிடங்கள் இடைநில்லாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி கேத்தனூர் அரசு பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் சித்ரா ஹரி கோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.

நம் கை சிலம்பம் அமைப்பின் பயிற்சியாளர் சுதாகர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மரம் வளர்ப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும், மாணவர்கள், பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பாரத தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 92 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் நம் கை சிலம்பம் அமைப்பினர் இணைந்து மரம் வளர்ப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 மாணவர்கள் பங்கேற்ற 92 நிமிடங்கள் இடைநில்லாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி கேத்தனூர் அரசு பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் சித்ரா ஹரி கோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நம் கை சிலம்பம் அமைப்பின் பயிற்சியாளர் சுதாகர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மரம் வளர்ப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும், மாணவர்கள், பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.