வால்பாறை வழியாக கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

மழை காரணமாக அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்துள்ளதால், அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.


கோவை: சாலையை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி உள்ளது. இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதில் வால்பாறையில் இருந்து 80 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகள் பார்க்க செல்லுகின்றனர்.



இந்நிலையில் நேற்று அதிரப்பள்ளி வன பகுதியில் பெய்த கனமழையால் அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்தது.

இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...