உடுமலையில் பாஜக சார்பில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி - பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.


 திருப்பூர்: பாஜக கடந்த 9 ஆண்டுகளாக செய்த சாதனைகளை விளக்கும் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் பாஜக மாநில தலைமை அறிவுறுத்தல் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக செய்த நலத்திட்டங்களான மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், இந்து மதத்தின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று இணையவேண்டும் என பேசபட்டது.



இந்த நிகழ்வில் ஆர் எஸ் எஸ் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து முன்னணி காரியகர்த்தாக்கள் மற்றும் காவி சொந்தங்கள் உடுமலை நகர பாஜக பொறுப்பாளர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட அணி பொறுப்பாளர்கள் நகர பாஜக பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல உடுமலை நகராட்சிக்குட்பட்ட எரிப்பாளையம் கங்காதரன் லேஅவுட் காந்தி சவுக் பழனியாண்டவர் நகர் நெடுஞ்செழியன் காலனி நெல்லுக்கடை வீதி உட்பட 33 வார்டுகளிலும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் சார்பில் கூடுவோம் கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...