உடுமலையில் பாஜக சார்பில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி - பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.


 திருப்பூர்: பாஜக கடந்த 9 ஆண்டுகளாக செய்த சாதனைகளை விளக்கும் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் பாஜக மாநில தலைமை அறிவுறுத்தல் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக செய்த நலத்திட்டங்களான மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், இந்து மதத்தின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று இணையவேண்டும் என பேசபட்டது.



இந்த நிகழ்வில் ஆர் எஸ் எஸ் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து முன்னணி காரியகர்த்தாக்கள் மற்றும் காவி சொந்தங்கள் உடுமலை நகர பாஜக பொறுப்பாளர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட அணி பொறுப்பாளர்கள் நகர பாஜக பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல உடுமலை நகராட்சிக்குட்பட்ட எரிப்பாளையம் கங்காதரன் லேஅவுட் காந்தி சவுக் பழனியாண்டவர் நகர் நெடுஞ்செழியன் காலனி நெல்லுக்கடை வீதி உட்பட 33 வார்டுகளிலும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் சார்பில் கூடுவோம் கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...