உடுமலையில் பாஜக சார்பில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி - பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.


 திருப்பூர்: பாஜக கடந்த 9 ஆண்டுகளாக செய்த சாதனைகளை விளக்கும் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் பாஜக மாநில தலைமை அறிவுறுத்தல் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக செய்த நலத்திட்டங்களான மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், இந்து மதத்தின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று இணையவேண்டும் என பேசபட்டது.



இந்த நிகழ்வில் ஆர் எஸ் எஸ் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து முன்னணி காரியகர்த்தாக்கள் மற்றும் காவி சொந்தங்கள் உடுமலை நகர பாஜக பொறுப்பாளர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட அணி பொறுப்பாளர்கள் நகர பாஜக பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல உடுமலை நகராட்சிக்குட்பட்ட எரிப்பாளையம் கங்காதரன் லேஅவுட் காந்தி சவுக் பழனியாண்டவர் நகர் நெடுஞ்செழியன் காலனி நெல்லுக்கடை வீதி உட்பட 33 வார்டுகளிலும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் சார்பில் கூடுவோம் கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...