கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 3 அடி உயர்ந்துள்ளது.
கோவை: வால்பாறை பகுதிகளில் கடந்த தினங்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 98.28 அடியாக உயர்ந்தது. ஓரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு, 1,269 கனஅடி நீர்வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 410 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
மழை நிலவரம்: அளவு(மி.மீ.,)சோலையாறு - 31, பரம்பிக்குளம் - 20, ஆழியாறு - 49, வால்பாறை - 78, மேல்நீராறு - 106, கீழ்நீராறு - 88, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 22, சர்க்கார்பதி - 21. வேட்டைக்காரன்புதுார் - 27, மணக்கடவு - 7, துாணக்கடவு - 16, பெருவாரிப்பள்ளம் - 18, நவமலை - 23, பொள்ளாச்சி - 58 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 98.28 அடியாக உயர்ந்தது. ஓரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு, 1,269 கனஅடி நீர்வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 410 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
மழை நிலவரம்: அளவு(மி.மீ.,)சோலையாறு - 31, பரம்பிக்குளம் - 20, ஆழியாறு - 49, வால்பாறை - 78, மேல்நீராறு - 106, கீழ்நீராறு - 88, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 22, சர்க்கார்பதி - 21. வேட்டைக்காரன்புதுார் - 27, மணக்கடவு - 7, துாணக்கடவு - 16, பெருவாரிப்பள்ளம் - 18, நவமலை - 23, பொள்ளாச்சி - 58 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.