நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் தாராபுரம் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது.
திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும், அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகர மன்றத் தலைவர் பாபு கண்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி ஜவகர் நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாரி ஜான் முன்னிலை வைத்தார்.

தலைவர் பாபு கண்ணன் பேசியதாவது, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் உணவகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனி நபர்களின் இல்லங்கள், ஒலித்தவைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவான அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி ஐயப்பன் ஷாலினி நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி ஜவகர் நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாரி ஜான் முன்னிலை வைத்தார்.
தலைவர் பாபு கண்ணன் பேசியதாவது, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் உணவகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனி நபர்களின் இல்லங்கள், ஒலித்தவைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவான அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி ஐயப்பன் ஷாலினி நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.