போயம்பாளையத்தில் 66வது பவளக்கொடி கும்மி ஆட்டம் அரங்கேற்றம் - 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தில் நடைபெற்ற 66 வது பவளக்கொடி கும்மி ஆட்ட அரங்கேற்றத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பாரம்பரிய கும்மி ஆட்டத்தை ஆடி அசத்தினர்.


திருப்பூர்: 3 மணி நேரம் நடைபெற்ற கும்மி ஆட்ட நிகழ்ச்சியில் 35 வகையான ஆட்ட நுணுக்கங்களில் பெண்கள் கும்மி அடித்து மிக நேர்த்தியாக ஆடியதை திரளானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாரம்பரிய கும்மி ஆட்டம் பெரும் எழுச்சி பெற்று வருகிறது. கோவில் விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விழாக்களில் இடம்பெறும் கும்மி ஆட்டம் திருப்பூர் பகுதியில் பொதுமக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.



அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் பவளக்கொடி கும்மி குழுவின் 66 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.



இதில் கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் 300 பெண்கள் பல்வேறு கும்மி பாடல்களுக்கு கும்மி ஆட்டம் ஆடி அசத்தினார்கள்.



3 மணி நேரம் நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியில் 35 வகையான ஆட்ட நுணுக்கங்களில் பெண்கள் கும்மி ஆடினார்கள். மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியை பொதுமக்கள் திரண்டு ரசித்தனர். திருப்பூரில் கும்மி ஆட்டம் புத்துணர்வுடன் வளர்ந்து வருவதாகவும், பாரம்பரிய கும்மி ஆட்டத்தை பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று ஆடுவதாக கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இந்த கும்மி ஆட்டம் ஆடுவதன் மூலம் மனமும் உடலும் புத்துணர்வு பெறுவதாகவும் பெண்கள் ஏராளமாக கலந்து கொண்டு கும்மி ஆட ஆர்வம் காட்டுவதாக இளம் பெண்கள் பாரம்பரிய கும்மி ஆட்டத்தை மீட்டெடுத்து வருவதாகவும் ஷர்மி ஶ்ரீ என்ற பெண் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...