மடத்துக்குளம் அருகே இலவச மருத்துவ முகாம் - பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நடந்த இலவச மருத்துவமுகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.



மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சி, நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக, லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியினை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயகுமார் துவக்கி வைத்தனர்.



மேலும் இந்நிகழ்வில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் சாகுல் அமீது மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நரசிங்கபுரம் கிளைக் செயலாளர் ராஜ்மோகன் உட்பட கிளைக் கழக நிர்வாகிகள் முத்துச்சாமி, சௌந்தரராஜன், முருகானந்தம், கோபால்சாமி எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் மைவாடி ஊராட்சி செயலர் முகமது இஷாக் உட்பட மருத்துவர்கள் பரமசிவம், கௌரி பரமசிவம், கார்த்திக் உட்பட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...