விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் - மடத்துக்குளத்தில் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் அறிவுரை

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுவதாக இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் கூறினார்.


திருப்பூர்: விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் மடத்துக்குளத்தில் நடைப்பெற்ற விளையாட்டு விழாவில் அறிவுரை கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் ஜே எஸ் ஆர் கல்வி குழுமத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜே எஸ் ஆர் கல்வி குழுமங்களின் தாளாளர் எஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் விழாவிற்கு முன்னிலை வகித்தார். விழாவில் ஸ்டாலின் நாகராஜ் அவர்கள் பேசும் பொழுது.

கொரோனா காலகட்டத்தில் ஏராளமானோர் இந்தியாவில் உயிரிழந்த நிலையில் ஒரு விளையாட்டு வீரர் கூட கொரனாவால் உயிர் இழக்க வில்லை காரணம் விளையாட்டு தான் மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. விளையாட்டுத்துறையில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி சாதிக்க வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை பேசினார் .

விளையாட்டு விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஸ்டாலின் நாகராஜன் ஏற்றுக்கொண்டார் . பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரர்கள ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வலம் வந்தனர்.



மழலையர் குழந்தைகளின் உடற்பயிற்சி, வண்ணமயமான பாராசூட் உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ் டான்ஸ், சிலம்பம் யோகா போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



இந்த நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...