மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
கோவை: கோவை பூ மார்க்கெட் அருகே தேவாங்க பேட்டை வீதியைச் சேர்ந்தவர் பியூஸ் ஆர். டாடேடு. இவர் அதே பகுதியில் உள்ள 3
மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் டைல்ஸ் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று (29-02-2024) காலை 9 மணியளவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த கடையில் இருந்து மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தெற்கு உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, நிலைய அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள கட்டிடங்களுக்கு தீ வராமல் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்தனர்.
மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் டைல்ஸ் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று (29-02-2024) காலை 9 மணியளவில் இவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த கடையில் இருந்து மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தெற்கு உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, நிலைய அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் அருகே உள்ள கட்டிடங்களுக்கு தீ வராமல் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் கடைக்குள் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டைல்ஸ்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இந்த தீ விபத்தானது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்தனர்.