சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த பல்லடம் மாணவர்கள்

சூரத்தில் "Indian Powerlifting federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு விக்னேஷ் வெள்ளி பதக்கத்தையும், ரித்திக் தங்கப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்வேல்-தேவி தம்பதியினரின் மகன் ரித்திக். மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்- ஈஸ்வரி தம்பதியினரின் மகன் விக்னேஷ். ரித்திக் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். விக்னேஷ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் "Indian Powerlifting federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் 59 கிலோ எடை பளு தூக்கும் போட்டியில் விக்னேஷ் வெள்ளி பதக்கத்தையும், 83 கிலோ எடைகளான பளு தூக்கும் போட்டியில் ரித்திக் தங்கப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளனர்.



போட்டி முடிவுற்ற பின் நேற்று பல்லடம் வந்தடைந்த இருவருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விக்னேஷின் தந்தை திருப்பூரில் டெய்லராக பணியாற்றி வரும் நிலையில், பயிற்சிக்காக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆவதாகவும், ஜூன் மாதம் UK வில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பல் தூக்கும் போட்டியில் பங்கேற்க நிதி பற்றாக்குறை உள்ளதாகவும், அதேபோன்று யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் ரித்திக் தனது தந்தையை இழந்து தனது தாயின் வருமானத்தில் கூடுதலாக பளு தூக்கும் பயிற்சி பெற்று தேசிய அளவிலான போட்டியில் சாதனை படைத்துள்ளதாகவும், தமிழக அரசு தங்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச போட்டியில் பங்கேற்க இருவருக்கும் உதவ வேண்டும் என விக்னேஷ் மற்றும் ரித்திக் ஆகியோரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...