தமிழ்நாட்டு மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான்- காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

கலைஞர் கருணாநிதி சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் விமர்சித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் ஏசி காலனி பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இன்று காலை 6 மணி முதல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக காங்கேயம் நகர செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் தலைமையில் நகர பொருளாளர் கந்தசாமி முன்னிலையில் மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஈரோடு அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கூறுகையில், இரட்டை இலையும், அதிமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றும், இதற்கு நேர் மாறாக இருக்கும் மக்கள் விரோத ஆட்சி திமுக அரசு என்றும், இதுவரை எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்யவில்லை. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்ட எந்த நலத்திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.



தமிழகத்தில் சாராய ஆலைகள் அதிக அளவில் திமுக இடம் தான் உள்ளது. அதனால் மதுக்கடைகளை மூடுவதாக கூறிவிட்டு அதிக அளவில் திறந்து வைத்துள்ளனர். கலைஞர் அவர்கள் சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார்கள். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார். மேலும் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...