இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர்  -  தமிழக முதல்வருடன் சந்திப்பு..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்து, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.


கோவை: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து முதல்வரிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோவை வந்திருந்தார். 

அப்போது அவரை சந்தித்த கோவையை சேர்ந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் அவர்களது கோரிக்கையை ஏற்று சிறைவாசிகளை நிபந்தனை இன்றி விடுவித்த முதல்வருக்கு நன்றி கூறி பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர். 



இது குறித்து தெரிவித்துள்ள இஸ்லாமிய கூட்டமைப்பினர்,

ஜனநாயகத்தின் மாண்புகளை காக்கவும், அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளை காக்கவும், சிறுபான்மை சமூக மக்களின் நலனை மீட்கவும், மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம். 

இந்தியாவின் மிக சிறந்த மனிதநேய நடவடிக்கையாக 

2021 ஆம் ஆண்டு, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு முன்வைத்த முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையை ஏற்று, எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் சிறைவாசிகள் விடுதலை செய்த திமுக அரசின் மனிதநேய நடவடிக்கைக்கு கோவை இஸ்லாமியகூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் மனிதநேய மக்கள் ஆட்சி அமைய, கோவை கூட்டமைப்பின் முயற்சிகள் மற்றும் களப்பணிகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து, 

சிறுபான்மை சமூக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. 



அதன்படி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களான - கோவை தொகுதி திமுக வேட்பாளர்கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு வழங்குவதற்கான, ஆதரவு நிலைப்பாடு கடிதம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. 

கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர்,கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...