அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை அருகே உள்ள புத்தர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கலந்துகொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட செல்வபுரம் கிராமத்திற்கு அருகில் மலை அடிவார பகுதியில் புத்த சீடர்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தர் கோவில் அமைத்து பூஜை செய்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்.



இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கோவிலுக்கு வருகை புரிந்தார். அதன் பின் உலக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணுதல், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் எந்த ஒரு வன்முறை இல்லாமல் நடைபெற வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் தமிழ் புலிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், மடத்துக்குளம் ஊடகப்பிரிவு நம்பிராஜன், எலையமுத்தூர் திமுக கிளை தலைவர் பழனிச்சாமி, கோவை ஆனந்தன், புத்தர் கோவில் ஆலய நிர்வாகிகள் காளியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...