வால்பாறையில் வாக்குசாவடி மையங்களில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - தேர்தல் அதிகாரி வாசுதேவன் விளக்கம்

வால்பாறை மேல்பகுதியில் வனவிலங்குகளால் ஏதேனும் அச்சுறுத்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஷேக்கல்முடி, மானாம்பள்ளி, சக்தி, ஹைபாரஸ்ட் உள்ளிட்ட நான்கு வாக்குசாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வாசுதேவன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை சட்டமன்ற தொகுதி மேற்பகுதியில் உள்ள சுமார் 68 வாக்கு மையங்களுக்கான வாக்களிக்கும் இயந்திரங்கள் காவல் துறையினரின் முழு பாதுகாப்புடன் அந்தந்த மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இது பற்றி தேர்தல் அதிகாரி வாசுதேவன் கூறும்போது, வாக்கு மையங்களில் வாக்காளர்களின் வசதிகளுக்காக குடிநீர்வசதி, பாத்ரூம் வசதி, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு இயந்திரங்கள் ஒரு வேளை பழுதானால் அதற்கான மாற்று இயந்திரங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.



வால்பாறை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் சுமார் 1 லட்சத்து 97 ஆயிரத்து 950 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 94 ஆயிரத்து 127 பேர்களும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 3 ஆயிரத்து 800 பேர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேர்களும் உள்ளனர் என்றும், 324 பணியாளர்கள் வாக்கு மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் துணை ராணுவம் மற்றும் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வால்பாறை மேல்பகுதியில் வனவிலங்குகளால் ஏதேனும் அச்சுறுத்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஷேக்கல்முடி, மானாம்பள்ளி,சக்தி, ஹைபாரஸ்ட் உள்ளிட்ட நான்கு வாக்கு சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தேர்தல் நாளான நாளை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...