கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி பயணிகளிடம் போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது, ஜெராகி பகுதியை சேர்ந்த வினோ என்பவர் ஆடையில் மறைத்து வைத்து கொண்டு சென்ற 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கேரளா, தமிழக எல்லையான வாளையார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்துகளில் பயணிகளிடம் கேரள போலீசார் நேற்று ஏப்ரல்.22 பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகளிடம் பரிசோதனை செய்தனர்.பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பவரை பரிசோதித்த போது அவரது ஆடையில் ரகசிய அறைகள் தயார் செய்யப்பட்டு அவற்றிற்குள் பணம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதால், அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதால், அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.