கடும் வெயிலால் கோவையில் இளநீர் விலை உயர்வு - ஒரு இளநீர் ரூ.45 விற்பனை

வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகின்றனர். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது என்று வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஜில்லென்று காற்று வீசும் குளுகுளு கோவையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கரும்பு ஜூஸ், கூல், மோர் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி ஊட்டக்கூடிய பானங்களை பருகி வெப்பத்தை தனித்து வருகிறார்கள்.இந்த நிலையில், வெயிலுக்கு இளநீர் உகந்ததாக இருப்பதால் இளநீர் கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

இதன் காரணமாக கோவையில் இளநீர் விலை உயர்ந்து உள்ளது. அதன்படி கடந்த மாதம் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்று தற்போது (ஏப்ரல்.23) ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளநீர் வியாபாரிகள் கூறுகையில், கோவைக்கு பொதுவாக பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகிறார்கள். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் இளநீர் விலை உயர்ந்து இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் ஒரு இளநீரின் விலை ரூ.50-ஐ தொட்டு விடும் என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...