கோவையில் முன் விரோதம் காரணமாக நடைபெற்ற தகராறில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாளால் வெட்டு

இது குறித்த புகாரின் பேரில், கடைவீதி போலீசார் கதிர்வேல் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.



Coimbatore: கோவை செட்டி வீதி வைசியாள் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(43). ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்(எ) சிங்கான்(40) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.27) சுரேஷ்குமார் செட்டி வீதி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கதிர்வேலுக்கும், சுரேஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கதிர்வேல் தகாத வார்த்தைகளால் பேசி ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமாரை அரிவாளால் வெட்டினார்.

இதில் பின்னந்தலையில் பலந்த வெட்டு காயமடைந்த சுரேஷ்குமாரை அக்கம்பத்தினர் மீட்டு ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், கடைவீதி போலீசார் கதிர்வேல் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

முன்னதாக, நேற்று இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்பு செல்வபுரம் அசோக்நகரில் டூ-வீலர் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கதிர்வேல் குடிபோதையில் கூலி தொழிலாளி சக்திவேல் முத்து(42) என்பவரை உருட்டு கட்டையால் தாக்கி உள்ளார். 

இது குறித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசாரும் கதிர்வேல் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவர் மீது ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கோவை காவல் நிலையங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...