சவுக்கு சங்கர் கைது: கோவைக்கு அழைத்து வரும் வழியில் காவல்துறை வாகனம் விபத்து.

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறைக்கு கொண்டு வரும் வழியில்,  தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம், காவல்துறை மோதியதில் சவுக்கு சங்கர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.


கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இன்று அதிகாலை யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்ட நிலையில்,கைதுக்கு பிறகான ஒரு பரபரப்பான நிகழ்வில், சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 







இன்று நள்ளிரவு 3 மணி அளவில் தேனியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். தேனியில் இருந்து

கோவையில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அவரை காவல்துறை வாகனம்.மூலம் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...