கோவை அருகே, கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த இருவர் கைது. இதில் 11 கிலோ கஞ்சாவை சிக்கியது.
கோவை: கோவை கற்பகம் கல்லூரி அருகே, மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைக்க, காவல்துறையினர் சந்திப்பு அருகே வாகனசோதனை நடத்தி இருவரை கைது செய்தனர். பாலசுப்பிரமணியம் மற்றும் சிவாஜி என்ற இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது இவர்களிடமிருந்து ரூ.1,10,000/- மதிப்பிலான 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனின் தலைமையில் இந்த சோதனைகள் நடைபெற்றன. போதைப் பொருள் விற்பனை எதிர்ப்பு நடவடிக்கை கூடுதலாக கடுமைப்படுத்தப்பட்டு வருகிறது என்று பத்ரிநாராயணன் தெரிவித்தார்.
அப்போது இவர்களிடமிருந்து ரூ.1,10,000/- மதிப்பிலான 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனின் தலைமையில் இந்த சோதனைகள் நடைபெற்றன. போதைப் பொருள் விற்பனை எதிர்ப்பு நடவடிக்கை கூடுதலாக கடுமைப்படுத்தப்பட்டு வருகிறது என்று பத்ரிநாராயணன் தெரிவித்தார்.