கோட்டூரில் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோட்டூர் பேரூராட்சியின் 6, 8, 10 மற்றும் 12 வது வார்டுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், வேண்டப்பட்டவர்கள் வார்டுகளுக்கு மட்டும் தினமும் குடிநீர் வழங்குகிறது என்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. ஆழியார் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கோட்டூர் பேரூராட்சியின் 6, 8, 10 மற்றும் 12 வது வார்டுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில் முறையாக குடிநீர் வழங்க கோரி நேற்று இரவு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோட்டூர்-அங்கலக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, பேரூராட்சி நிர்வாகம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வார்டுகளுக்கு மட்டும் தினமும் குடிநீர் வழங்குகிறது. எங்கள் பகுதிக்கு ஐந்து நாட்கள் நாட்கள் ஆகியும் இதுவரை குடிநீர் வழங்கவில்லை. முறையாக குடிநீர் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.



இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



இதனால் பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...