உடுமலையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாற்றம்

இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவனை தவிர, ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் மற்றொரு 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 12ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு ஆறு பேர் திருப்பூர் சிறையிலும் மூன்று சிறுவர்கள் கோவை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஜெயகாளீஸ்வரன், மதன்குமார், பரணிக்குமார், யுவபிரகாஷ், நந்தகோபால், பவாபாரதி ஆகியோரின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் ஜெயகாளீஸ்வரன் சிறுவன் ஒருவன் தவிர ஏழு பேர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...