அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் - கோவை ஆட்சியர் தகவல்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), ஆனைகட்டி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சிநிலையம், வால்பாறை ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 2024 ஆம் கல்வியாண்டில் பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது.



கோவை: கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கு விருப்பமுள்ள மாணவ/மாணவியர் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (மே.15) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தெரிவித்துள்ளதாவது, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது), ஆனைகட்டி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சிநிலையம், வால்பாறை ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 2024 ஆம் கல்வியாண்டில் பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதில் கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ELECTRICIAN, MMV, FITTER, TURNER, TURNER (DST), MACHINIST, MACHINIST(DST), R&A/C, COPA, WIREMAN, WELDER, ICTSM, INSTRUMENT MECHANIC, MMTM, PPO, SHEET METAL WORKER, TECHNICIAN MECHATRONICS, FOOD PRODUCTION, INTERIOR DESIGN AND DECORATION EM REMOTELY PILOTED AIRCRAFT (DRONE PILOT) போன்ற பல்வேறு பிரிவுகளில் ( ஆண் - பெண் ) இருபாலருக்கும் ஆறுமாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேலும், TATA INDUSTRY 4.0 திட்டத்தின் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான ADVANCED CNC MACHINING TECHNICIAN, INDUSTRIAL ROBOTICS & DIGITAL MANUFACTURING, BASIC DESIGNER & VIRTUAL VERIFIER, MECHANIC ELECTRIC VEHICLE மற்றும் MANUFACTURING PROCESS CONTROL & AUTOMATION முதலிய ஈராண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகளிலும் சேர்க்கை நடைபெறவுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்களின் விண்ணப்பங்கள் (www.skilltraining.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் 07.06.2024 இரவு 12.00 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/மாணவியர் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இலவசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக்

கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதற்கான பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவன்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக்கருவிகள், NIMI புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. பிரதிமாதம் ரூ.750/- வீதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை அரசால் வழங்கப்படுகிறது.

இதற்கான கல்வித் தகுதி தொழிற்பிரிவுகளை பொருத்து 8ஆம் வகுப்பு/10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்டவகுப்பு/பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு உணவு வசதியுடன் தங்கும் விடுதி வசதி (தகுதியின்அடிப்படையில்) வழங்கப்படும். வயது வரம்புன் 14 முதல் 40 வரை (மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை) இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் (Campus Interview)மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...