அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி மற்றும் உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளும், அரியவகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஒரு பகுதியில் காட்டு யானை குடும்பம் ஒன்று உறங்கும் அழகிய காட்சி வெளியாகி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது.

இந்த யானைகளுக்கு பாதுகாப்பாக ஒரு யானை காவலுக்கு நின்று கவனித்துக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஒரு பகுதியில் காட்டு யானை குடும்பம் ஒன்று உறங்கும் அழகிய காட்சி வெளியாகி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது.
இந்த யானைகளுக்கு பாதுகாப்பாக ஒரு யானை காவலுக்கு நின்று கவனித்துக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.