கோவையில் வரும் 24ஆம் தேதி அரசு பொருட்காட்சி தொடங்குகிறது. இந்த பொருட்காட்சி 45 நாட்களுக்கு நடைபெறும், பல அரசுத் துறைகள் பங்கேற்பு.
கோவை: தமிழக அரசு சார்பில் கோடை காலங்களில் மாவட்டந்தோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கோவையில் ஆண்டுதோறும் இந்த பொருட்காட்சி நடைபெறும் நிலையில், கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 24ம் தேதி தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறுகிறது. இந்த பொருட்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகளின் சாதனை விளக்க அரங்குகள், குழந்தைகளைக் கவரும் ராட்டினங்கள், உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மதுரையிலும் இந்த பொருட்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி வரும் 24ம் தேதி தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறுகிறது. இந்த பொருட்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகளின் சாதனை விளக்க அரங்குகள், குழந்தைகளைக் கவரும் ராட்டினங்கள், உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மதுரையிலும் இந்த பொருட்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.