கோவை லங்கா கார்னரில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைப்பு - வாகன ஓட்டிகள் நிம்மதி

லங்கா கார்னரில் மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டது. இதனால் நேற்று கனமழை பெய்த போதும், மேம்பாலங்களுக்குக் கீழே தண்ணீர் தேங்கவில்லை. இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்த நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் பல மணி நேரம் தொடர் கனமழை பெய்தது.

இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சாலைகளின் நிலை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பொதுவாக மழை வரும்போதெல்லாம் கோவையில் லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளி மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேங்கும்.

தண்ணீரில் மிதந்தபடி சென்று விடலாம் என்று எண்ணி அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் மழை நீரில் தத்தளித்து பழுதாகி நிற்கும் நிலை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது.

இதற்கு மாநகராட்சி தரப்பில் வெவ்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டும் பயனில்லாமல் இருந்து வந்தது. இதனிடையே மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மழை நீரை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்தார்.

வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. மழைநீர் வடிகால்கள் மேம்படுத்தப்பட்டன. ராட்சத மின் மோட்டார்கள் கொண்டு மழை நீர் அகற்றப்பட்டது. லங்கா கார்னரில் மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டது.



இதனால் நேற்று மே.22 மாலை நகரில் கனமழை பெய்த போதும், மேம்பாலங்களுக்குக் கீழே தண்ணீர் தேங்கவில்லை.



இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...