தாராபுரத்தில் விற்பனைக்காக கொண்டு வந்த மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் - வட மாநில தொழிலாளி கைது

தாராபுரம் பகுதி பழனி பைபாஸ் சாலையில் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டுவந்த வடமாநிலத்தை சேர்ந்த சபிலா குமாரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி பைபாஸ் சாலை அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு காவல் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் துறை ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையில் மதுவிலக்கு போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தாராபுரம் முதல் கரூர் வரை செல்லும் பழனி பைபாஸ் சாலை அருகே உள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தார்.



இதனால் சந்தேகமடைந்து மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராம் குமார் என்பவரின் மகன் சபிலா குமார் வயது 27 என்பது தெரியவந்தது. சபிலா குமார் அவிநாசி எம்.நாதம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

சபிலா குமார் அவ்வப்போது ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு வந்து திருப்பூர், ஈரோடு, தாராபுரம், பழனி ஆகிய பகுதிகளில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களிடம் விற்பனை செய்வது தெரியவந்தது.

அதேபோன்று இன்று தாராபுரம் பகுதியில் பழனி பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்த சபிலா குமார் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வந்திருந்தார். இதைத்தொடர்ந்து மதுவிலக்கு காவல்துறையினர் சபிலா குமாரை கைது செய்து அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...