கோவை மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் முகாம்

மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


கோவை: தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அந்த மனுக்கள் மீதான மறுவிசாரணை ஒவ்வொருவாரமும் புதன்கிழமை அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன்படி காவலர் குறைதீர்க்கும் முகாம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைானத்தில் உள்ள மாவட்ட ஆயதப்படை அலுவலகத்தில் நேற்று மே.29 நடைபெற்றது.



இதில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மனுக்களின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.



இந்த முகாமில் குடும்பபிரச்சினை, பணப்பரிமாற்ற பிரச்சினை, இடப்பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக 79 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் 1 மனு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. 2 மனுக்களுக்கு சி.எஸ்.ஆர். எனப்படும் புகார் ஏற்பு மனு வழங்கப்பட்டது. 67 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 9 மனுக்கள் மீது மேல் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டும் தீர்வு காணப்பட்டது.

வாரத்தில் புதன்கிழமை தவிர்த்த பிற நாட்களில் அந்தந்த உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு சென்று குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பத்திரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...