கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர் மறைவிற்கு சக பத்திரிக்கையாளர்கள் அஞ்சலி

தினமணி பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த அஜய் ஜோசப் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு சக பத்திரிக்கையாளர்களும், புகைப்பட கலைஞர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோவையில் தினமணி பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய் ஜோசப். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி பகுதியில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானார். அந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் நேற்று மே.29 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் இன்று மே.30 அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அஜய் வேலையின் போது எவ்வாறு துறுதுறுப்புடன் இருப்பார், அவரது எளிமையான பழக்க வழக்கங்கள், நட்பு ரீதியான விஷயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அனைவரும் வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டுமென மூத்த பத்திரிக்கையாளர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...