எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமி இடையே உட்கட்சி பூசல் - கோவையில் அண்ணாமலை பேட்டி

எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டனர். திமுகவினர் ஆடுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.


கோவை: டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்ளை சந்தித்து பேசினார். அப்போத அவர் பேசியாதவது, 2019அம் ஆண்டு அதிமுக ஆளும் கட்சி. பாஜக 303 சீட்டுகள் வாங்கினர். ஆனால் அன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்தது.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும் என எஸ்.பி.வேலுமணிக்கு அவர் பதிலளித்துள்ளார். எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது.

பாஜக இருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது உட்கட்சி பூசல் தான். கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு. இல்லை என்றால் ஒரு பேச்சு. அதிமுக கோவையில் அனைத்து எம்.எல்.ஏ இருந்தும் ஏன் வெற்றி பெற வில்லை. கோவை மக்கள் அதிமுகவை நிராகரித்து விட்டார்கள்.

பாஜகவிற்கு காலம் வரும். தொண்டர்கள் உணர்ச்சி வசபட வேண்டாம். திமுகவினர் ஆடுகளை வெட்டாமல் என் மீது கை வையுங்கள். அப்பாவி ஆட்டை துன்புறுத்த வேண்டாம். வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் அவர் வாக்குவாதம் செய்தார்.

கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்து காட்டுவோம். படிப்படியாக தான் வெற்றியை பார்க்க முடியும். அதிகளவில் எஸ்.பி வேலுமணி தவறான புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளார்.

இணை அமைச்சர் பதவி ஏற்பதாக கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. கோவை மக்களுக்கு கடமை பட்டுள்ளோம். ஆளும் கட்சிக்கு எதிராக வாக்கு அளித்து உள்ளனர். கோவை மக்களின் வாக்கு எங்களை உற்சாகம் படைத்துள்ளது.

எஸ்.வி.சேகர் யார் என்று எனக்கு தெரியாது. எங்களின் செயல்பாடு தான் 2 இலக்குகளில் வாக்கு வாங்கியுள்ளோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருகை என்பதும் புதியவர்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுப்பது அதிகம். 2026 கூட்டணி ஆட்சி தான் அமையும். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதிலே தெரியும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...