பொது இடங்களில் மாடு வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் - கோவை ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனு

பக்ரீத் பண்டிகை நாளில் பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் வதை செய்வதை தடுக்க கோரி வரும் 17.06.2024 அன்று பக்ரீத்-ஐ முன்னிட்டு கோவையில் செல்வபுரம், உக்கடம் ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறைச்சிக்காக மாடுகள் பொது இடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடங்களில் இது போலவே அரசு அனுமதி பெற்ற இறைச்சி கூடங்களை தவிர்த்து, பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டன. அரசின் சட்ட திட்டங்களுக்குப்பட்டு, கால்நடை மருத்துவரின் சான்றிதழ், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடங்கள் மட்டும் பயன்படுத்துவது போன்ற விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து மாடுகள் வெட்டப்படுவதாக அறிகிறோம்.



எனவே இதுபோன்ற நிகழ்வுகளை இந்த வருடமும் நடைபெறாமல், முன் கூட்டியே அரசும், காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வஹிந்து பரிஷத்தின் பசு பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...