பர்னிசிங் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பர்னிசிங் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பணியாளர்கள், உடனடியாக வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் சுதாரித்துக் கொண்டு வெளியேறியதால் பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் சுதாரித்துக் கொண்டு வெளியேறியதால் பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.